பிறந்து முப்பத்திரெண்டு ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருகின்றேனோ, அதையே இந்த வலை தளத்தின் முதல் பதிவாக சமர்பிக்கிறேன். உளறுவது ஒரு கேலிக்குரிய விஷயமாக கருதப்பட்டாலும், உளறுவது மிக கடினமான ஒரு செயல், எல்லாராலும் எளிதாக உளர இயலாது, உளறுவது ஒரு கலை. நம்ப மருப்போர்களுக்கு இந்த வலைதளமே சாட்சி. இதில் நான் உளறுவதற்கு எவ்வளவு சிரமபட்டுள்ளேன் என்று நீங்களே அறிவீர்கள். உன் வலை தளத்திருக்கு வருகை தருவதால் எனக்கென்ன பயன் என்று வினைவோருக்கு, சில தகவல்கள்.
தன்னம்பிக்கை குறைவாக இருப்பவரா நீங்கள் ? என் வலை தளத்திற்கு வருகை தந்தால் - மைனர்குஞ்சு போன்ற முட்டாளே இந்த உலகில் வாழும் பொழுது, நான் ஏன் வாழக்கூடாது என்ற உற்சாகம் பிறக்கும்
சோகத்தில் மட்டுமே வாழ்பவரா நீங்கள் ? என் வலை தளத்திற்கு வருகை தந்தால் - மினர்குஞ்சுவின் கேலியான தமிழ் உரைநடை உங்கள் கவலைகளை மறக்க செய்யும்
வாழ்கையின் பயன் என்ன என்று தெரியாமல் அலைபவரா நீங்கள் ? - என் வலை தளத்திற்கு வருகை தந்தால் - மினர்குஞ்சு போன்ற அற்ப பதர்களே வாழ்கையின் பயனை பற்றி பேசும் பொழுது, நாமும் ஏன் பேசக்கூடாது என்று உங்களையும் ஒரு வலை தளம் இயற்ற தூண்டும்.
கவலை என்பதே என்ன என்று தெரியாதவர்களா நீங்கள் ? - என் வலை தளர்திர்க்கு வருகை தந்தால் - இப்படி எழுதியே பல தமிழ் நெஞ்சங்களை இந்த மைனர்குஞ்சு கொல்கிறானே என்ற புது கவலை உங்கள் மனதில் பதியும்.
இப்படி பல நன்மைகளை கருதித்தான், உங்கள் அனைவரையும் சோதிக்க கிளம்பி இருக்கிறான் இந்த மைனர்குஞ்சு. இங்கே என் நெஞ்சத்தில் உதிக்கும் மோசமான முதல், மிக மோசமான கதைகளையும், கவிதைகளையும், நகைச்சுவைகளையும் பதிவு செய்ய உள்ளேன். இது முற்றிலும் என் தமிழின் எழுத்துத்திறனை அதிகரித்து கொள்வதற்கே உருவாக்கப்பட்ட வலைத்தளம். தமிழ் மேல் பற்று கொண்ட அனைத்து நெஞ்சங்களும், எனது பதிவுகளின் எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
Post a Comment